மேலும்

பாதுகாப்புச் செயலரை பதவி நீக்க வேண்டும் – கலாநிதி சரத் விஜேசூரிய

Karunasena Hettiarachchiசிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று, நீதிக்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளர் கலாநிதி சரத் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சிக்கு எதிராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் தான் முறைப்பாடு ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கலாநிதி சரத் விஜேசூரிய தெரிவித்தார்.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்துக்கு உதவிய சிவில் அமைப்புகளை உள்ளடக்கிய நீதிக்கான தேசிய அமைப்பின் தேசிய அமைப்பாளராக, கலாநிதி சரத் விஜேசூரிய பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *