சிறிலங்காவில் இராணுவம் அதிகாரத்துக்கு வருவதை புதுடெல்லி சகித்துக் கொள்ளாது
சிறிலங்காவில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது, எத்தகைய இராணுவப் புரட்சி முயற்சிகளையும் முறியடிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா முழு ஆதரவையும் அளிக்கும் என்று சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நெத் எவ்எம் வானொலிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே, அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறார். சிறிலங்காவில் இராணுவப் புரட்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அதனை முறியடிக்க இந்தியா உதவும்.
சிறிலங்கா அதிபருக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளது. சிறிலங்கா அரசுக்கு உதவியாக இந்தியா இரண்டு கப்பல்களை அனுப்பும்.
சிறிலங்காவில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை புதுடெல்லி சகித்துக் கொள்ளாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.