சிறிலங்காவில் இராணுவப் புரட்சி – எச்சரித்தார் தினேஸ், நிராகரித்தார் ராஜித
சிறிலங்காவில் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“எமக்கு நேரம் வழங்கப்படவில்லை. எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகம் இது போன்று தான் இருக்குமானால், ஆபத்தான நிலைமையைத் தோற்றுவிக்கும்.
இதுபோன்று ஜனநாயகம் நசுக்கப்படுமானால், இராணுவப் புரட்சி ஏற்படும் ஆபத்து உள்ளது.” என்றும் தினேஸ் குணவர்த்தன எச்சரித்தார்.
அதேவேளை, இராணுவப் புரட்சி குறித்த தினேஸ் குணவர்த்தனவின் கருத்துக்களை சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நிராகரித்துள்ளார்.
வவுனியாவில் இன்று கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்காவில் இராணுவப் புரட்சி ஏற்படும் வாய்ப்பு இல்லை.
ஜனநாயக முறையில் ஆட்சியைப் பிடிக்க முடியாமதவர்கள் தான், இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிக்க கனவு காண்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.