மேலும்

மாதம்: September 2016

யாழ்ப்பாணத்தில் ஐ.நா பொதுச்செயலர் – கூட்டமைப்பையும் சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ  மூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பான் கீ மூனிடம் கால அவகாசம் கோரிய சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் காலஅவகாசம் வழங்குமாறு தாம் கோரியதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“மகிந்தவே வெளியேறு” – மலேசியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி, இன்று காலை கோலாலம்பூரில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனடா இடைத்தேர்தலில் ஒரே தொகுதியில் மோதிய இரு தமிழ் வேட்பாளர்களும் தோல்வி

கனடாவில் ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தின், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதிக்கு நேற்று நடந்த இடைத்தேர்தலில், இரண்டு ஈழத் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினர்.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நேற்றுமாலை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஐ.நா பொதுச்செயலருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தலையீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிங்களத் தேசியவாத அமைப்புகள் நேற்று எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டன.

வெளிநாட்டு நீதிபதிகளை அனைத்துலக சமூகம் இனி வலியுறுத்தாது – என்கிறது சிறிலங்கா

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணையை நடத்த  வேண்டும் என்று, ஐ.நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ ஏனைய உலக அமைப்புகளோ, அனைத்துலக சமூகமோ இனிமேல் வலியுறுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீன- சிறிலங்கா உறவுகளை கெடுப்பதற்கு அனுமதியோம் – சீனத் தூதுவர் எச்சரிக்கை

கொழும்பு நிதி நகரத் திட்டத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை கெடுப்பதற்கு எவரையும் சீனா அனுமதிக்காது என்று, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

தப்பியோட முனைந்தவரை சுட்டுக்கொன்ற இராணுவ அதிகாரிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்ற போது, தவறுதலாகச் சுட்டுக் கொன்றார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவருக்கு எதிராகவும் வழக்கு

சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை வைத்திருந்து இயக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் மீதும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.