மேலும்

துரையப்பா விளையாட்டரங்கத் திறப்பு விழா – காணொளி மூலம் இணைந்தார் இந்தியப் பிரதமர்

யாழ்ப்பாணத்தில் இந்தியாவின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கு திறப்பு விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளித் தொழில்நுட்பத்தின் மூலம் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா அதிபர் பங்கேற்றுள்ள இந்த விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இருந்து காணொளித் தொழில்நுட்பத்தின் மூலம் இணைந்து கொண்டார்.

ஒரே நேரத்தில் இருதலைவர்களும் வணக்கம் தெரிவித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், விளையாட்டரங்கையும் கூட்டாகத் திறந்து வைத்தனர்.

modi-joint-video-con (1)modi-joint-video-con (3)

modi-joint-video-con  (2)

அத்துடன் இந்தியப் பிரதமர் கூட்டுப் பிரகடனத்தையும் வெளியிட்டார். அதன் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உரையும் இடம்பெற்றது.

இந்த காணொளித் தொழில்நுட்பம் மூலம் இந்தியப் பிரதமருடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் மற்றும் புதுடெல்லியில் உள்ள சிறிலங்கா தூதுவர் எசல வீரக்கோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *