சீனாவுடன் வலுவான இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்படும் – சிறிலங்கா பிரதமர்
எதிர்காலத்தை மனதில் கொண்டு சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சீனாவுடன் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தன உடன்பாடு அடுத்த ஆண்டு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துடன் தொடர்புடைய சீன நிறுவனத்துடன் புதிய உடன்பாடு வரும் ஓகஸ்ட் மாதம் கையெழுத்திடப்படும்.
புதிய உடன்பாட்டுக்கு அமைய, சீன துறைமுக பொறியியல் நிறுவனத்துக்கு, 99 ஆண்டு குத்தகைக்கு துறைமுக நகரக் காணி வழங்கப்படும்.
சிங்கப்பூர் மற்றும் டுபாய் பொருளாதார கேந்திரங்கள் வரிசையில், துறைமுக நகரமும் மாற்றப்படும்.
பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஜப்பான் மற்றும் இந்தியாவுடனும் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது.
புதிய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கையின் விளைவாகவே சிறிலங்காவுக்கு வெளிநாட்டு உதவிகள் அதிகரித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.