அலவி மெளலானா காலமானார்
மேல் மாகாண முன்னாள் ஆளுனரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான அலவி மெலானா இன்று மாலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும்.
1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் இறங்கிய அலவி மௌலானா, 1956ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத்துக்கு பொறுப்பான பதவிகளை வகித்த இவர், 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை மேல் மாகாண ஆளுனராக பதவி வகித்திருந்தார்.
சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில், 2001 தொடக்கம் 2002 வரை தொழில் அமைச்சராகவும் இவர் பணியாற்றியிருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவராகவும் பதவி வகித்த அலவி மௌலானா, அண்மைய காலமாக தீவிர அரசியலில் இருந்து விலகியருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.