மேலும்

சிறிலங்கா இராணுவத்தில் ஐந்து புதிய மேஜர் ஜெனரல்கள்

Sri_Lanka_Army_Flagசிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 2016 ஏப்ரல் 28ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் ஆர்.ஏ.ஏ.ஏ.பெரேரா, பிரிகேடியர்  எச்.டபிள்யூ.எஸ்.டி.பி. பனன்வல, பிரிகேடியர் பி.எச்.எம்.ஏ. விஜேசிங்க, பிரிகேடியர்  நிசங்க ரணவான,  பிரிகேடியர்  கே.பி.ஏ ஜெயசேகர ஆகியோரே மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பதவி உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்னமும் நிலுவையில் உள்ள போதிலும், இவர்கள் தமது புதிய பதவி நிலையை அணிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *