எக்னெலிகொட வழக்கில் தடுப்பில் இருந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிக்கு பிணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான லெப்.கேணல், பிரபோத சிறிவர்த்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஹோமகம நீதிமன்ற நீதிவான், ரங்க திசநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இரண்டு மில்லியன் ரூபா காசுப் பிணையிலும், தலா 6 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பேரின் சரீரப் பிணையிலும், செல்வதற்கு லெப்.கேணல் சிறிவர்த்தனவுக்கு, நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபரான இவர், பல மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.