மேலும்

சிறிலங்காவில் எட்காவுக்கு எதிர்ப்பு – விழிப்புணர்வை ஏற்படுத்த நிபுணர்குழுவை அனுப்புகிறது இந்தியா

India-srilanka-Flagஇந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொள்வதற்கு சிறிலங்காவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நி்லையில், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய நிபுணர் குழுவொன்று சிறிலங்கா வரவுள்ளது.

இந்தியாவுடன் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை செய்து கொண்டால், சிறிலங்காவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று சிறிலங்காவின் கூட்டு எதிரணியினதும், சில தொழிற்சங்கங்களும் எச்சரித்து வருகின்றன.

எனினும், யார் எதிர்த்தாலும், உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா பிரதமர் தெரிவித்திருந்தார்.

சிறிலங்காவில் இந்த உடன்பாட்டுக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது, புதுடெல்லியைக் கவலை கொள்ள வைத்துள்ளது.

இந்த நிலையிலேயே இந்திய நிபுணர்களின் குழுவொன்று சிறிலங்கா வந்து இந்த உடன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

வரும் மார்ச் 4ஆம் நாள் இந்த நிபுணர் குழு சிறிலங்காவில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *