யோசிதவுக்கு மேலும் இரண்டு வாரங்கள் விளக்கமறியல்
நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடுவெல நீதிமன்றத்தில் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்ட லெப்.யோசித ராஜபக்ச மற்றும் நிசாந்த ரணதுங்க, ரொகான் வெலிவிட்ட உள்ளிட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் மார்ச் 10ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.
இதையடுத்து இவர்கள் மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்படவுள்ளனர்.