சீனாவுடனான உறவுகள் குலையவில்லை – என்கிறது சிறிலங்கா
சீனாவுடன் தற்போதும் நெருக்கமான உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் பேணி வருவதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம.
“தற்போதைய அரசாங்கம் சீனாவுடனான இராஜதந்திர உறவுகளைக் கெடுத்து விட்டதாக, கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை.
நாம், சீனாவுடனும், இந்தியாவுடனும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறோம்.
சீனாவின் முதலீட்டுடன் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் எப்ரல் மாதம் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது சீனா அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.