மேலும்

ஐதேகவுக்குத் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்

SLFPசிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகள் அதிகரித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் ஐதேகவில் இணையத் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர்கள் சரத் அமுனுகம மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோரே இவ்வாறு ஐதேகவில் இணைந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, குறிப்பிட்ட சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்றாலும், பொது சேவைகள் காத்திரமான முறையில் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சிகளில், அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபடும் நிலை ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *