மேலும்

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடற்படையில் இருந்து நீக்கப்படுவார் யோசித – கப்டன் அலவி

Yoshitha-Rajapaksaசி.எஸ்.என் தொலைக்காட்சி நிதிமோசடிக் குற்றச்சாட்டில் லெப்.யோசித ராஜபக்ச குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவர் கடற்படையில் இருந்து நீக்கப்படுவார் என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

அனுமதி பெறாமல் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டமை, ஒரு கடற்படை அதிகாரியாக இருந்து கொண்டு  அரசியலில் ஈடுபட்டமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக லெப்.யோசித ராஜபக்ச மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் அவர் நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிமோசடிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், லெப்.யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து நீக்கப்படுவார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *