மேலும்

சிறிலங்காவுடன் வலுவான உறவை எதிர்பார்க்கிறது இந்தியா – நரேந்திர மோடி

narendra-modiசிறிலங்காவுடன் இன்னும் வலுவான உறவுகளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

சிறிலங்காவின் 68 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியா- சிறிலங்கா இடையிலான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. வரும் ஆண்டுகளில் இந்த உறவுகள் இன்னும் வலுவடையும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது” என்றும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *