மேலும்

சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்து நாடு திரும்புகிறார் மன்னார் ஆயர்

mannar-bishopசிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயருக்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக அவர், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

மூன்று மாதங்களுக்கு மேலாக அங்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலே, மன்னார் ஆயர் மீண்டும் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்னார் ஆயரை மீண்டும் அழைத்து வரும் ஏற்பாடுகளை மன்னார் ஆயர் இல்லம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *