சீனாவுடனான நெருங்கிய மத உறவுகளை வெளிப்படுத்த சிறிலங்காவில் புதிய பௌத்த தொலைக்காட்சி
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான மத உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், புதிய பௌத்த தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவைகள் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்வில், நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இந்த தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவைகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில், 1150 பௌத்த பிக்குகள் கலந்து கொண்ட பௌத்த மதச் சடங்கும் இடம்பெற்றது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
சிறிலங்காவில் ஏற்கனவே பௌத்த மதப் பரப்புகைக்கான தொலைக்காட்சிகள் இருக்கும் நிலையில், இந்தப் புதிய தொலைக்காட்சி சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பௌத்த மத உறவுகளை வெளிப்படுத்தும் வகையிலான நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.