மேலும்

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

parliament13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 13வது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.

“காணி, காவல்துறை அதிகாரங்கள், மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.” என்றும் வலியுறுத்தினார்.

அதேவேளை, கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் உரையாற்றிய போது, முன்னைய அரசாங்கங்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தவறியுள்ளன என்று குற்றம்சாட்டினார்.

அத்துடன், 18ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், 13ஆவது திருத்தச்சட்டத்தின் சில பிரிவுகளை முன்னைய அரசாங்கம் நீக்கி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *