பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதனை முன்னிட்டு ஹோமகம நீதிமன்றப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் நீதிமன்றப் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்த நேற்று ஹோமகம நீதிவான் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த, பொது பலசேனா உள்ளிட்ட பெளத்த அடிப்படைவாத அமைப்புகள் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களான இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிவான் உத்தரவிட்டார்.
படங்கள் – லங்காதீப