மேலும்

நௌருவில் மரத்தில் ஏறிப்போராட்டம் நடத்திய தமிழ் அகதி சிறையில் அடைப்பு

Tamil asylum seeker detained on Nauruநௌரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய ஒரு தொகுதி அகதிகள், நௌரு தீவில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவரின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து, நேற்றுமுன்தினம் காலை அங்கிருந்த மரம் ஒன்றில் ஏறி போராட்டம் நடத்தினார்.

தனது புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டால் கீழே குதித்து உயிரை மாய்க்கப் போவதாக அவர் அச்சுறுத்தினார்.

Tamil asylum seeker detained on Nauru

ஒன்பது மணிநேரமாக போராட்டம் நடத்திய நிலையில், கீழே இறங்கி வந்தால், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதையடுத்து கீழ் இறங்கி வந்த, குறிப்பிட்ட தமிழ் அகதியை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *