சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க தீவிரவாத முறியடிப்பு நிபுணர்
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் தீவிரவாத முறியடிப்பு நிபுணர் ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தில் தீவிரவாத முறியடிப்புக்கான பிராந்திய இணைப்பாளராகப் பணியாற்றும், ஸ்டீபன் கோல்ட்ரப், என்ற நிபுணரே சிறிலங்கா வந்துள்ளார்.
இவர், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்களில், சி்றிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியும் பங்குகொண்டார்.
அமெரிக்க நிபுணருடன், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரியான ஜோசப் ஸ்காலரும் சந்திப்பில் பங்கெடுத்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேசப்பட்டுள்ளது.