யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது – சமந்தா பவர்
யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புக்கு காத்துக் கொண்டிருக்க முடியாது என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவைச சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சமந்தா பவர், அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்புச் செய்வதற்கு காத்துக் கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்த சமந்தா பவர் அடுத்து, யாழ். ஒஸ்மானியா கல்லூரியின் புதிய விஞ்ஞான கூடத்தையும் திறந்து வைத்தார்.
இதையடுத்து, மழைக்கும் மத்தியில் மாணவர்களுடன் இணைந்து அவர், மட்டைப்பந்து (எல்லே) விளையாட்டிலும் ஈடுபட்டார்.