யாழ்ப்பாணத்தில் சமந்தா பவர் – வடமாகாண ஆளுனர், முதல்வருடன் பேச்சு
ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று காலை முதல் யாழ்ப்பாணத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் முதலில் வடக்கு மாகாண ஆளுனரைச் சந்தித்துப் பேசினார்.
வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவுடன், அவரது அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன.
இந்தப் பேச்சுக்களில், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் துதுவர் அதுல் கெசாப் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர் மான்பிரீத் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறார்.