மேலும்

இன்று சிறிலங்கா வருகிறது ஐ.நா குழு – ஒத்துழைக்குமாறு அரசிடம் கோருகிறது மன்னிப்புச்சபை

இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இது தொடர்பாக, அனைத்துலக மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர், முதல் முறையாக, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறது.

இந்த முக்கியமான பயணம், சிறிலங்காவில் காணாமற்போன ஆயிரக்கணக்கானோர் தொடர்பாக, அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்களின் நிலை என்ன, தமது உறவுகள் எங்கே என்ற அறிவதற்கும், தமது உறவுகள் காணாமற் போனதற்கு நீதி தேடுவதற்கும் இழப்பீடுகளைப் பெறுவதற்கும், அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக அமையும்.

எல்லா சமூகங்களிலும், காணாமற்போதல்கள் நிகழ்ந்துள்ளன. பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் உண்மையை தேடுகின்றனர். பொறுப்புக் கூறலை எதிர்பார்க்கின்றனர்.

எனவே, ஐ.நா குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கம் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புச்சபை கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *