மேலும்

அரசியல் கைதிகள் விவகாரம் – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கப் போகிறதாம் கூட்டமைப்பு

Prisonerதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தவாரம் பேச்சு நடத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றம் இன்று கூடும் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இறுதி முடிவை எடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தும்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும், பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

ஏற்கனவே சிறிலங்கா அதிபரைச் சந்திக்க  எம்மால் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அவர் தாய்லாந்து சென்றதால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை.  எனினும் இந்த வாரத்தில் அந்தச் சந்திப்பு நடைபெறும்.

இதன் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்பை வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “அரசியல் கைதிகள் விவகாரம் – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கப் போகிறதாம் கூட்டமைப்பு”

  1. மனோ says:

    அப்பிடியே மாலு பாண் பனிஸ் கிடைச்சா மறக்காம இரண்டை எடுத்துட்டு வாங்க பிளீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *