மேலும்

சிறிலங்கா மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்- அனைத்துலக அமைப்புகள் கூட்டறிக்கை

HRWசிறிலங்காவின் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் தனியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று, அனைத்துலக மனி்த உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன.

ஜெனிவாவில் கடந்த மூன்று வாரங்களாக நடந்து வந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்தொடரின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் குறித்தும், பத்து அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த, பிலிப் டாம் வெளியிட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையில், சிறிலங்காவின் பொறுப்புக்கூறல்  விவகாரங்களிலும், உறுதியான முடிவுகளைத் தருவதற்கு, விடாமுயற்சியுடன் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதிலும் தொடர்ந்தும் தனியான கவனம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்கிறோம்.

பேரவையின் தலைமைத்துவம், துணிச்சல், உறுதி ஆகியவற்றுக்கு இது,  நல்லதொரு முன்னுதாரணமாக அமையும்.” என்றும் அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக சேவை, ஆட்டிக்கல் 19, மனித உரிமைகள், மற்றும் அபிவிருத்திக்கான ஆசிய அமைப்பு, மனித உரிமைகள் கற்கைக்கான கெய்ரோ நிறுவகம், சிவிகஸ், ஈஸ்ட் அன்ட் ஹோர்ன் ஆபிரிக்க மனித உரிமைகள் பாதுகாப்புத் திட்டம், மனித உரிமைகள் சட்ட நிலையம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக கூட்டமைப்பு, சித்திரவதைகளுக்கு எதிராக உலக அமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *