மேலும்

சீனாவிடம் பாரிய போர்க்கப்பலை வாங்குகிறது சிறிலங்கா

sl-china-navy-commnders (5)சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல் ஒன்றை சீனாவிடம் இருந்து வாங்குவது குறித்து, சீன பாதுகாப்பு அதிகாரிகளுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தின் போதே, சீனாவிடம் இருந்து பாரிய பார்க்கப்பல் ஒன்றை கொள்வனவு செய்வது குறித்து, சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், எந்த வகையான போர்க்கப்பல் வாங்கப்படவுள்ளது என்பது பற்றியோ, அதன் விலை தொடர்பான விபரங்களோ அல்லது எப்போது கொள்வனவு செய்யப்படும் என்பது பற்றிய எந்த தகவலையும் சிறிலங்கா கடற்படை வெளியிடவில்லை.

sl-china-navy-commnders (1)sl-china-navy-commnders (2)sl-china-navy-commnders (3)sl-china-navy-commnders (4)sl-china-navy-commnders (5)

சிறிலங்கா கடற்படைத் தளபதி கடந்த 08ஆம் நாள் தொடக்கம், 13ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

சீனக் கடற்படைத் தளபதி அட்மிரல் வூ செங்லி (Admiral Wu Shengli) யின் அழைப்பின் பேரில் சீனா சென்றிருந்த சிறிலங்கா கடற்படைத் தளபதி பீஜிங்கில், சீன பாதுகாப்பு அமைச்சர், சாங் வான்குவானையும் சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

இது தொடர்பான விபரங்களை சீன பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

எனினும் சிறிலங்கா கடற்படைத் தளபதியின் சீனப் பயணம் தொடர்பான தகவல்களை சிறிலங்கா இப்போது தான் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *