சிறிலங்காவின் பாதுகாப்பு ஒதுக்கீடு இந்தியா, சீனாவை விட அதிகம்
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி, ஒப்பீட்டளவில் இந்தியா, சீனா போன்ற நாடுகளை விடவும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
2014ஆம் ஆண்டு நிலவரப்படி, சிறிலங்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதம், பாதுகாப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் பூட்டான் மொத்த தேசிய உற்பத்தியில் 9 சதவீதத்தையும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டது.
அதையடுத்து பாகிஸ்தான் மொத்த தேசிய உற்பத்தியில் 8 சத வீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்கியிருந்தது.
எனினும், ஆசியாவின் வல்லரசு நாடுகளான சீனாவும் இந்தியாவும்- மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தையே கடந்த ஆண்டு பாதுகாப்புக்காக செலவிட்டுள்ளன.
அதேவேளை பங்களாதேசும், நேபாளமும், தமது மொத்த தேசிய உற்பத்தியில், 3 சதவீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியிருந்தன.