சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமனம்
சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு இன்று காலை அறிவித்துள்ளது.
இவர் நாளை இந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக இருந்த எயர் மார்ஷல் கோலித குணதிலக நாளை முதல், சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்தே, புதிய விமானப்படைத் தளபதியாக எயர் வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவருக்குமான நியமனக் கடிதங்களை இன்று காலையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.