கொழும்பு வந்தார் பாகிஸ்தான் இராணுவத் தளபதி
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், ஐந்து நாள் பயணமாக இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா வரவேற்றார்.
சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அவர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, அவர் கவனம் செலுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.