மேலும்

சிறிலங்கா குறித்த அறிக்கையைப் பார்த்து திகைத்தாராம் ஜோன் கெரி

mangala-kerryசிறிலங்காவில் 100 நாள் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கையைப் பார்த்து அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி திகைத்துப் போனதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளராக ராஜித சேனாரத்ன.

இந்தக் குறுகிய காலப் பகுதிக்குள் ஒரு அமெரிக்க அதிபரால் கூட, இதுபோன்ற பெரும் எண்ணிக்கையான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்றும் ஜோன் கெரி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சில வாரங்களுக்கு முன்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த பின்னரே ஜோன் கெரி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் உள்ள தமது தூதரகத்திடம், ஒரு அறிக்கையை கேட்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, ஒரு பக்க அறிக்கையைத் தான் எதிர்பார்த்திருந்தார் என்றும்,  மூன்று பக்க அறிக்கையைப் பெற்றதும் அவர் அதிர்ச்சியடைந்தார் என்றும் ராஜித சேனாரத்ன கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *