மேலும்

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சென்னையில் இலங்கைத் தமிழ் பிரமுகர்களுடன் சந்திப்பு

julie-bishopஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், சென்னையில் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சென்னையில் உள்ள அவுஸ்ரேலிய துணைத் தூதரகத்தில் இன்று நடந்த இந்தச் சந்திப்பு, ஆக்கபூர்வமானதாக அமைந்தது என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் ருவிட்டரின் சற்று முன்னர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில், ஈழ ஏதிலியர் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் சந்திரகாசன் தலைமையிலான, இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

julie-bishop-chennai

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான புனர்வாழ்வு மற்றும் உதவிகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது முக்கியமான கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *