சிறிலங்காவில் அசாதாரணமான மாற்றங்கள் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜோன் கெரி
கடந்த சில மாதங்களில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான – சாதகமான மாற்றங்கள், இலங்கைத்தீவில் உள்ள மக்கள் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக ஒன்றுபடும் புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிங்கள – தமிழ்ப் புத்தாண்டையொட்டி, சிறிலங்காவில் வாழும், சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சார்பிலும், அமெரிக்க மக்களின் சார்பிலும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தச் செய்தியில் அவர், “கடந்த சில மாதங்களில், சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான – சாதகமான மாற்றங்கள், இலங்கைத் தீவில் உள்ள மக்கள் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் அமைதிக்காக ஒன்றுபடும் புதிய வாய்ப்புகளை அளிப்பதாக, இந்தப் புத்தாண்டு அமைந்துள்ளது.
வளமான, ஒன்றுபட்ட, ஜனநாயக, சிறிலங்காவை கட்டியெழுப்பும் உங்களின் பணிகள் தொடரட்டும்.
புத்தாண்டு மகிழ்ச்சியானதாகவும், அமைதியானதாகவும் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.