திருமலை கடற்பரப்பில் இந்திய- சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் போர்ப்பயிற்சி
திருக்கோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்றுக்காலை பாரிய போர்ப்பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.
இந்தியக் கடற்படையின் ரிர், கேசரி, சுதர்சினி ஆகிய கப்பல்களும், வருண என்ற, இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பலும், சிறிலங்கா கடற்படையின், நான்கு போர்க்கப்பல்கள் மற்றும், ஆறு அதிவேக தாக்குதல் படகுகளுடன் இணைந்து இந்த போர்ப்பயிற்சியில் ஈடுபட்டன.
திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு அப்பால் நேற்று அதிகாலை தொடக்கம் 3 மணித்தியாலங்கள் இந்தப் பயிற்சிகள் இடம்பெற்றன.
இதையடுத்து, இந்தியக் கடற்படைக் கப்பல்கள், தமது மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு திருக்கோணமலைத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றன.