மேலும்

சிறிலங்கா தொழிற்கட்சியின் மூலம் பிரதமர் பதவிக்குப் போட்டியிட மகிந்த முடிவு

Mahinda-depatureசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்காக, சிறிலங்கா தொழிற்கட்சி மூலம் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

சிறிலங்கா தொழிற்கட்சியின் தலைவர் ஏ.எஸ்.பி.லியனகே, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமது கட்சியுடன், மகிந்த ராஜபக்ச பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது குறித்தும் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும், ஏ.எஸ்.பி லியனகே கூறியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூலம் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு, மகிந்த ராஜபக்சவுக்கு முழுமையான ஆதரவு கிடைக்காத நிலையில், தொழிற்கட்சி மூலம் போட்டியிட மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான ஏ.எஸ்.பி.லியனகே, கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

ஆனால், அவர் தனக்கு அரச ஊடகங்களில் ஒதுக்கப்பட்ட நேரத்தை, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைக்கு பயன்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *