மேலும்

சீனாவை குற்றவாளி போல நடத்துகிறது புதிய அரசாங்கம்- மகிந்த விசனம்

mahinda-vajraசிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீனா விவகாரத்தில் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றும், சீனாவை குற்றவாளி போல நடத்துவதாகவும், குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் சவுத் சைனா போஸ்ட் நாளிதழுக்கு அளித்துள்ள தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.

“சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தேவையின்றி உள்நாட்டு அரசியலுக்குள் சீனாவை இழுத்துள்ளது. இது நியாயமற்றது.

சீனா வழங்கிய உதவிகளுக்காக இவர்கள் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள்.

ஆனால், இவர்கள் குற்றவாளியைப் போல சீனாவை நடத்துகிறார்கள்”என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *