மேலும்

இந்தியாவில் 1,02,004 இலங்கை அகதிகள்

Sri-Lankan-Tamil-refugeesஇந்தியாவில், ஒரு இலட்சத்து, இரண்டாயிரத்து நான்கு இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாக, இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தில், எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த, இந்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில அரசாங்கங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 2014 டிசெம்பர் 1ம் நாள், 1,02,004 இலங்கை அகதிகள் தங்கியிருக்கின்றனர்.

இவர்களில், 64,931 அகதிகள், தமிழ்நாட்டில் உள்ள 109 முகாம்களிலும், ஒடிசாவில் உள்ள ஒரு முகாமிலும், வசித்து வருகின்றனர்.

எஞ்சிய 37,073 இலங்கை அகதிகள், அருகிலுள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்த பின்னர், முகாம்களுக்கு வெளியே, வசித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *