லண்டன் சென்ற மைத்திரிக்கு வரவேற்பு
லண்டனில் நாளை நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிரித்தானியா சென்றடைந்துள்ளார்.
லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்த சிறிலங்கா அதிபருக்கு, சிறிலங்கா தூதரக அதிகாரிகளும் பிரித்தானிய அரசாங்கப் பிரதிநிதிகளும் வரவேற்பு அளித்தனர்.
கொமன்வெல்த் அமைப்பின் தலைவரான சிறிலங்கா அதிபர், நாளை லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் தேவாலயத்தில் நடைபெறும் கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார்.