மேலும்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசாங்கம்

colombo-portcityகொழும்புத் துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளதாகவும், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், சமர்ப்பிக்கப்பட்ட இதுதொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு, நேற்றிரவு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, உடனடியாக இந்த திட்டத்தை இடைநிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“திட்டம் குறித்து மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரவை உபகுழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அனுமதி பெறப்படாமல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படடு செயற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது இடைநிறுத்தப்படும்.

இந்த திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு முன்னர்,  சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தேவையான அனுமதிகளை, இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு, திட்டத்தை செயற்படுத்தும் நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *