சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டம் – இம்மாதம் வழங்கப்படுகிறது
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பட்டத்தை அளிக்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிகழ்வு வரும் 22ம் நாள் இடம்பெறவுள்ளது.
பீல்ட் மார்ஷல் பதவியில் நியமிக்கப்படவுள்ள முதல் இலங்கையர் ஜெனரல் சரத் பொன்சேகாவேயாவார். இதுவே இராணுவத்தில் உள்ள உயர்நிலைப் பதவியாகும்.