மேலும்

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு

zeid raad - mangala samaraweeraஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் நிகழ்ந்தபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா நிபுணர் குழு நடத்திய விசாரணை அறிக்கையுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

zeid raad - mangala samaraweera

இந்த சந்திப்பில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசம், ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *