மேலும்

Tag Archives: ஐ.நா நிபுணர் குழு

சிசிர மென்டிசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா நிபுணர் குழு

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தொடருக்கான சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் சிசிர மென்டிஸ் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறித்து, ஐ.நா நிபுணர் குழு அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது.

இறுதிப்போரில் 7000 பேரே மரணம் – ஐ.நா அறிக்கை மிகைப்படுத்தியதாக கூறுகிறார் மக்ஸ்வெல் பரணகம

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது போன்று, சிறிலங்காவின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்றும், 7000இற்கும் அதிகமானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், காணாமற்போனோர் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து ஆராயும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் மங்கள சமரவீர பேச்சு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவாவில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.