சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஜப்பான் ஆதரவு
சிறிலங்காவில் தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக, ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் உரையாற்றிய ஜப்பானிய உதவி வெளிவிவகார அமைச்சர் தகாஷி உட்டோ,சிறிலங்காவுக்கான ஜப்பானின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெறுவதை வரவேற்பதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.
இந்த கலந்துரையாடல்கள், உண்மையான நல்லிணக்கத்துக்கு இட்டுச்செல்லும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதனை அடைவதற்கு ஜப்பான் சாத்தியமான எல்லா ஒத்துழைப்புகளையும் வழங்கும் என்றும் ஜப்பானிய உதவி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.