மீண்டும் அதிகாரத்துக்கு வரும் ராஜபக்சவினரின் திட்டம் தோல்வி
ஊவா மாகாணசபை முதலமைச்சராக தம்மை மீண்டும் நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஊவா முதல்வராக ஹரீன் பெர்னான்டோ நியமிக்கப்பட்டதை ரத்துச் செய்யுமாறும், மீண்டும் தன்னை முதலமைச்சராக நியமிக்குமாறு உத்தரவிடவும் கோரி, சசீந்திர ராஜபக்சவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம், அதனை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஹரீன் பெர்னான்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவைப் பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் ராஜபக்சவினரின் ஒரு முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.