மேலும்

வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்கா வருகிறார் சுஸ்மா

Sushma-Swarajஇந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், வரும் 6ம் நாள்- வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு, இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சராக சுஸ்மா சுவராஜ், கடந்த ஆண்டு பதவியேற்ற பின்னர், சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இரண்டு நாட்கள் சிறிலங்காவில் தங்கியிருக்கும் அவர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வரும் 7ம் நாள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதால், இந்திய வெளிவிவகார அமைச்சரை அவர் பெரும்பாலும் சந்திக்கமாட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

வரும் 13ம் நாள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்துக்கான முன்னேற்பாடுகளை சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவில் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *