மேலும்

Tag Archives: ஐ.நா மனித உரிமைகள் பேரவை

தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.

ஜெனிவா பக்க அமர்வில் சரத் வீரசேகர குழு குழப்பம் – தமிழ்ப் பிரதிநிதிகளுடன் வாக்குவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான  குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா செல்லும் குழு – சிறிசேனவின் கையில் கடிவாளம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனியான பிரதிநிதிகள் குழுவை அனுப்பமாட்டார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு செல்கிறது மாரப்பன தலைமையிலான குழு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான 5 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளது.

சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றுவதற்கான சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் வரைவை, பிரித்தானியாவும், ஜேர்மனியும் நேற்று அதிகாரபூர்வமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன.

ஐ.நா தீர்மானத்தில் தளர்வுகளை ஏற்படுத்த அனைத்துலக சமூகம் இணக்கம் – சிறிலங்கா அரசு

சிறிலங்கா தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தின் சில பிரிவுகளைத் தளர்த்துவதற்கு, அனைத்துலக சமூகம் விருப்பம் வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா படையினரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை – பீரிஸ் குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா படையினரைப் பாதுகாக்க, சிறிலங்கா அரசாங்கம்  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் சிறிலங்காவுடன் மல்லுக்கட்டத் தயாராகும் அரச சார்பற்ற நிறுவனங்கள்

மனித உரிமைகள் விவகாரங்களில், ஐ.நா மனித உரிமைகள்  பேரவையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் மீது, அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் அதிருப்தியை வெளியிடவுள்ளன.

ஜெனிவா தீர்மான இணை அனுசரணையில் இருந்து விலகுகிறது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து விலகிக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆட்சியமைத்ததும் ஜெனிவா தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் – ஜி.எல். பீரிஸ்

சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.