ஐ.நா அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா உறுதி
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான, ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரித்தானியா உறுதியாக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுவது செப்ரெம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா இன்னமும் உறுதியாக உள்ளது.
சிறிலங்காவில் நடந்த சம்பவங்கள் குறித்த உண்மை கண்டறியப்படுவது, நல்லிணக்கத்தை நோக்கிய முக்கிய நகர்வாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.