மேலும்

கே.பி நாட்டைவிட்டு வெளியேற நீதிமன்றம் தடை

K.Pவிடுதலைப் புலிகளின் முன்னைய ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரன் பத்மநாதனை கைது செய்ய  உத்தரவிடக் கோரி, ஜேவிபியின் சார்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக இன்று நடத்தப்பட்ட விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கே.பி தொடர்பான விசாரணைகள் முடியும் வரை அவரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்று சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *