மேலும்

மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாக பெற்று வந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி

major general prasad samarasingheசிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர், சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும், தாமரைக் கோபுரம் (Lotus Tower) கட்டுமானப் பணிக்கான ஆலோசனைக் கட்டணமாக மாதம் ஒரு இலட்சம் ரூபாவை இரகசியமாகப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருக்கும், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவுக்கே, இந்த தொகையை சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் இரகசியமாக வழங்கி வந்துள்ளார்.

2013ம் ஆண்டுக்கான ஆலோசனைக் கட்டணம் முழுவதும் , ஸ்ரான்டட் ஸ்ராட்டட் வங்கியில் உள்ள மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவின் 001131168901 இலக்க வங்கிக் கணக்கில் சிறிலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தினால் வைப்பிலிடப்பட்டுள்ளது.

2012, 2014ம் ஆண்டுக்கான கொடுப்பனவுகள் குறித்த விபரங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை.

முன்னைய ஆட்சியின் போது, இராணுவ அதிகாரிகளை தமது பக்கத்தில் வைத்திருப்பதற்காக, இராஜதந்திர பதவிகள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *