மேலும்

மட்டக்களப்பில் மைத்திரியின் தேர்தல் செயலகம் மீது பெற்றோல் குண்டுவீச்சு

maithri-office-fire (1)மட்டக்களப்பு – சந்திவெளியில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் செயலகம் மீது நேற்று நள்ளிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில், மைத்திரிபாலவின் தேர்தல் செயலகத்துக்குள் நுழைந்து ஆயுதம் தாங்கிய குழுவினர், பெற்றொல் குண்டு வீசி தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, அங்கு தங்கியிருந்த 16 பேரும் தப்பியோடி விட்டனர்.

அதன் பின்னர், தேர்தல் செயலகத்துக்குள் நுழைந்த ஆயுதக்குழுவினர், அங்கிருந்த பொருட்களையும், தளபாடங்களையும் அடித்து நொருக்கியதுடன், ஆவணங்களுக்கும் தீவைத்து எரித்தனர்.

maithri-office-fire (2)

maithri-office-fire (1)

இதனால், மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் செயலகம் எரிந்து நாசமானது. அங்கிருந்தவர்கள் தப்பியோடி விட்டதால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *